சனி, 10 ஏப்ரல், 2010

மருத்துவ மூலிகை விவசாயம்

புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படும் கண்வலி கிழங்கு, மானாவாரி நிலங்களில் தானாக முளைத்துள்ளது. இந்த செடிகளை தோண்டி விவசாய தொழிலாளர்கள் தினமும் குறைந்தது 500 ரூபாய் சம்பாதிக்கின்றனர். கண்வலி கிழங்கு என்று அழைக்கப்படும் "செங்காந்தள்" என்னும் செடியில் இருந்து கிடைக்கும் விதை புற்றுநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. ஒரு கிலோ விதை ரூ.1,700க்கு விற்கப்படுகிறது.




இந்திய தேவை போக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் விதை ஏற்றுமதியாகிறது. இச் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்தால் ஆண்டுக்கு ரூ.5.10 லட்சத்திற்கு மகசூல் பெறலாம். ஒரு முறை நடவு செய்தால் ஐந்து ஆண்டு வரை பலன் கிடைக்கும். சாகுபடிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள "நேஷனல் மெடிசனல் பிளாண்ட்ஸ் போர்டு' (என்.எம்.பி.பி.) 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. விருதுநகர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் 8,000 ஏக்கர் சாகுபடி செய்துள்ளர்.




கரிசல் மண், மணல் கலந்த செவல் நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். வறட்சி பகுதிகளிலும் சிறப்பாக வளரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண் விதை கிழங்கு சிவகாசி பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லாத தரிசு நிலங்கள், முள்வேலி காடுகளில் தானாக முளைத்துள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை கண்வலி கிழங்கு செடிகள் தானாக முளைக்கும். இந்த காலங்களில் விவசாய தொழிலாளர்கள் பலரும் காட்டு பகுதிகளில் கம்பியுடன் சென்று மண்ணில் புதைந்துள்ள கிழங்குகளை தோண்டி எடுக்கின்றனர். தற்போது ஒரு கிலோ விதை ரூ.180 முதல் ரூ.220 வரை விலை போகிறது. ஒரு தொழிலாளி தினமும் 5 முதல் 10 கிலோ வரை தோண்டி எடுக்கின்றனர். இவற்றை வியாபாரிகளிடம் கொடுத்து பணம்
பெறுகின்றனர்.




ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.1800 வரை சம்பாதிக்கின்றனர். மேலாண்மறை நாட்டை சேர்ந்த 20 பேர் தினமும் கண்வலி கிழக்கு தோண்டுவதற்கே கிளம்பி விடுகின்றனர். மூலிகை செடி வியாபாரிகள் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு ஒரு கிலோ கண்வலி கிழங்கு ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர். கண்வலி கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் வெளிமாவட்ட விவசாயிகள் பலரும் சிவகாசிக்கு வந்து விதை கிழங்குகளை வாங்கி செல்கின்றனர்.




சிவகாசி ஏற்றுமதியாளர் மனோகரன் கூறியதாவது: 


கண்வலி கிழங்கு விதையின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சாகுபடி செய்தாலும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதை கிழங்கு அதிகளவில் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் கண்வலி கிழங்கு விதை 3 டன் ரூ. 51 லட்சத்திற்கு கொள்முதல் செய்தேன். வரும் ஆண்டில் கண்வலி கிழங்கு சாகுபடியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து ஒரு விதை கிலோ ரூ.1700க்கு குறையாமல் எடுத்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். வரும் 5 ஆண்டுகளுக்கு கிலோ ரூ.1700க்கு விலை குறையாது. ஐந்து ஆண்டுக்கு முன் ஒரு கிலோ விதை ரூ.350 ஆக இருந்தது. 2 ஆண்டிற்கு முன் ஒரு கிலோ ரூ.800 ஆக உயர்ந்தது. தற்போது கிலோ ரூ.1700க்கு உயர்ந்துள்ளது. இச்சாகுபடி செய்ய விரும்புவோர் தொழில் நுட்ப விபரங்கள் அறிய 94437 36794 தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக